Tuesday 19 February 2013

விஸ்வரூபம் கமல் - ஓர் அலசல்


 ஆங்கில மோகத்தோடு   பார்பன வாடையுடன் தொடங்குகிறது திரைக்கதை. சிக்கன் சாப்பிடும் பாப்பாதிகளை நையாண்டி செய்யும் கமல் அறிமுக பாடலில் கலக்குகிறார் கதக்குடன். மற்றும் ஒருமுறை  நாயகியுடன் கதக் ஆடுவார் என்ற எதிர்பார்ப்போடு ஏமாற்றத்துடன் முடிகிறது திரைப்படமும். விஸ்வநாதன் கதாபாத்திரத்தில் இருந்த கமலின் நடிப்பு ஏனோ காஷ்மீரியில் வெளிப்படவில்லை.  படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று லாஜிக் கேள்விகள் தோன்றும் வேளையில் நம்மை அதிகம் சிந்திக்க விடாமல் அடுத்த கட்டத்தை விறுவிறுப்புடன் நகர்த்துவது தான். சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் அனுபவத்தை தருகின்றன. ஹை டெக் கமலின் மற்றுமொறு பரிமாணம். வாழ்த்துக்கள் தோழரே. ஒரு வேளை பாமர ஜனங்களை கருத்தில் கொண்டு  படம்  எடுத்திருந்தால் விஜயகாந்தை கதா நாயகனாகப் போட்டிருப்பாரோ கமல்? 

உங்களின் சமூக அக்கறைக்கு எங்களது வணக்கங்கள் . ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு, அன்பே சிவம் போன்ற கமலின் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விஸ்வரூபத்தின் பிரமாண்டம் ஏற்படுத்தவில்லை. 

நல்லதோர் வீணை செய்தே - அதை 
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 
சொல்லடி, சிவசக்தி !~ எனைச் 
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.

Kamal Sir, it is the right time for introspection rather than entering into controversy……. உங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு இன்னமும் குறையவில்லை.............. தொடருங்கள்  ............

No comments:

Post a Comment