Monday 9 September 2013

சித்தவியல் - சித்தர்களின் சமூக நோக்கு - விலகிப் போவதா? ஒட்டி வாழ்வதா?

உலகத்தையும் அதன் நலன்களையும் மறுதலித்து விட்டுப் பெறுவதுதான்  மெய்யுணர்வு  என்று கருதுவது பிழையானது என்பது சித்தர்களின் கருத்து. சமூகத்தை விட்டுவிலகுவதும் அதனைத்துறந்து வெளியேறுவதுமானதுறவு சித்தர்களுக்குச் சம்மதமன்று. ஆன்மீக ஈடுபாடு என்பது சாதாரண மனிதனின் சிக்கல்களுக்குப் பாராமுகம் காட்டுவதாகாது. சித்தர்களின் ஆன்மீகம் சமூகத்திலிருந்தும் அதன் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறுவதன்று; அதுமானுடத்தோடு ஒட்டிவாழ்வது. சித்தர்கள் உலகத்தலிருந்து தனிமைப் படுத்திக்கொள்ள மாட்டார்கள், உலக நிகழ்வுகளில் ஈடுபாடு கொண்டால்அந்த ஈடுபாடு படைப்பாக்க ஆற்றலை ஒருங்குபடுதித்திக்கொள்ள உதவும்.

No comments:

Post a Comment